ஹோர்முஸ் நீரிணை மற்றும் அரபிக்கடல் வழியாகப் பயணம் செய்யும் கப்பல்களுக்கு ஈரானின் புரட்சிகர இராணுவத்தின் கடற்படை கட்டளைப் பணியகம், புதிய விதிகளை விதித்துள்ளது.
அதன்படி, ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் அல்லது அமெரிக்க இராணுவத் தளங்களுக்கான தளவாடங்களைக் கொண்டு செல்லும் கப்பல்கள் எவையும் இனி ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்று ஈரான் அறிவித்துள்ளது.
பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அமெரிக்காவிற்கு இனி எந்த இடமும் இல்லை என, தெஹ்ரானை தளமாகக் கொண்ட மூலோபாய ஆய்வுகளுக்கான மையத்தின் ஆராய்ச்சியாளர் அலி அக்பர் தாரினி தெரிவித்துள்ளார்.


