போர் தொடங்கியதில் இருந்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளது. அதேபோல், ஈரான் துறைமுகங்களுக்குச் செல்லும் கப்பல்களை அமெரிக்கா தடுத்து வருகிறது.
இந்நிலையில் ஈரானியக் கப்பல்களைக் கைப்பற்றும் விதம் குறித்து டிரம்ப் பெருமிதத்துடன் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, நாங்கள் ஈரான் கப்பல்களின் இறங்கி, அவற்றைக் கைப்பற்றுகிறோம். சரக்கு மற்றும் எண்ணெய் என அனைத்தையும் எடுத்துக்கொள்கிறோம். இது மிகவும் லாபகரமான ஒரு தொழில்.
நாங்கள் ஒருவகையில் கடற்கொள்ளையர்களைப் போலத்தான் செயல்படுகிறோம். ஆனால் நாங்கள் விளையாடவில்லை" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே ஈரானிய கச்சா எண்ணெயைச் சுமந்து சென்ற இரண்டு கப்பல்களை அமெரிக்கப் படைகள் தடுத்து நிறுத்தியதற்கு ஈரான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இது சர்வதேச கடற்பரப்பில் நடக்கும் ஆயுதமேந்திய கொள்ளை என்று ஈரான் சாடியுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை கடற்கொள்ளையை சட்டப்பூர்வமாக்குகிறது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் விமர்சித்துள்ளார்.
எந்த நாட்டு கப்பலாக இருந்தாலும் ஈரான் நோக்கிச் சென்றால் அவை தடுத்து நிறுத்தப்படும் என்று அமெரிக்க ராணுவம் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தடையால் ஈரானுக்கு சுமார் 480 கோடி டாலர் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


