TamilsGuide

அமெரிக்காவில் மாணவருக்கு இளம் ஆசிரியை அரங்கேற்றிய செயல் - பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு

ஒரு மாணவனின் வீட்டில் அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும்போது அவனுடன் தவறான உறவு கொண்டதையும், அதனை வீடியோ எடுத்ததையும் ஒப்புக்கொண்ட அமெரிக்க பள்ளி ஆசிரியை ஒருவருக்கு நீண்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மிச்சிகன் மாகாணத்தின் பாண்டியாக் நகரைச் சேர்ந்த 27 வயதான, மூன்றாம் நிலை குற்றவியல் பாலியல் நடத்தை குற்றத்தை மார்ச் மாதம் ஒப்புக்கொண்டதை அடுத்து, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) அவருக்கு நான்கு முதல் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கூறப்படும் இந்த பாலியல் உறவு, 2023-ஆம் ஆண்டில் வாட்டர்ஃபோர்ட் டவுன்ஷிப்பில் உள்ள ஓக்ஸைட் பிரெப் அகாடமியில் சான்ரோமன் ஆசிரியராக பணியாற்றியபோது நிகழ்ந்துள்ளது.

சான்ரோமன் தனது சக ஊழியர் ஒருவரிடம் அந்த பாலியல் சந்திப்பு குறித்து தெரிவித்த பின்னரே இந்த தகாத உறவு வெளிச்சத்திற்கு வந்தது.

அந்த சக ஊழியர் பொலிஸார்தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, சான்ரோமன் கைது செய்யப்பட்டு, அதனைத் தொடர்ந்த நீதிமன்ற நடவடிக்கைகள் நடைபெற்றன.

நியூயார்க் போஸ்ட் பத்திரிகையின் அறிக்கையின்படி, இந்த வழக்கை மேற்பார்வையிடும் நீதிபதி செரில் மேத்யூஸ், சன்ரோமன் அந்த மாணவியுடன் பாலியல் உறவு கொண்டது மட்டுமல்லாமல், அந்த சட்டவிரோத செயலை தனது வீட்டிலேயே படம்பிடித்ததும் அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Leave a comment

Comment