TamilsGuide

Rebuilding Sri Lanka நிதியத்திற்கு இலங்கை பெந்தகொஸ்தே சபையினால் 50 இலட்சம் ரூபா நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு, இலங்கை பெந்தகொஸ்தே சபை 50 இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியது.

இலங்கை பெந்தகொஸ்தே சபையின் அருட் தந்தை ரஞ்சித் சில்வாவினால்,  இந்த நிதி நன்கொடைக்கான காசோலை, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் அண்மையில் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அருட் தந்தை ஏ. பி. எல். டி. டி. சாமரவும் கலந்துகொண்டார்.
 

Leave a comment

Comment