ஞானசார தேரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
இலங்கை
இஸ்லாமிய மதத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில், பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அவரைப் பிணையில் விடுவிப்பதற்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.






















