TamilsGuide

சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட இலங்கை மாலுமியைப் பாதுகாப்பாக மீட்க, நடவடிக்கை

சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் கப்பலில் உள்ள இலங்கை மாலுமியைப் பாதுகாப்பாக மீட்க, இலங்கை அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இது தொடர்பாக எத்தியோப்பியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு, வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் சுற்றுலா அமைச்சு விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

சோமாலியாவின் புன்ட்லேண்ட் (Puntland) கடற்கரைக்கு அப்பால் கடத்தப்பட்ட இந்த எரிபொருள் கப்பலில், இலங்கையர் ஒருவருடன் பாகிஸ்தான், இந்தியா, இந்தோனேசியா மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாலுமிகளும் பணியாற்றி வருகின்றனர்.

சோமாலிய அதிகாரிகளுடன் இணைந்து, குறித்த இலங்கை மாலுமியை விரைவாக நாட்டுக்கு அழைத்து வருவது குறித்து கலந்துரையாடுமாறு தூதரக அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போதைய தகவல்களின்படி, கப்பலில் உள்ள பணியாளர்களுக்குக் காயம் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

எனினும், சம்பவம் குறித்த மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்கும், மாலுமிகளின் நிலைமையை மதிப்பிடுவதற்கும் சர்வதேச தரப்புகளுடன் இணைந்து இலங்கை அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment