TamilsGuide

அவ்வளவு பெரிய தொகையை செலவு செய்கிறோம், ஆனாலும் - துப்பாக்கி சூடு பற்றி டிரம்ப் வேதனை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேட்டோ மீது தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். கணிசமான அமெரிக்க நிதி ஆதரவு இருந்தபோதிலும், வெள்ளை மாளிகை செய்தியாளர் இரவு விருந்தின்போது நேட்டோ ஆதரவை வெளிப்படுத்தவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

ஃபாக்ஸ் நியூஸிடம் பேசிய டிரம்ப், "நேட்டோ மீது நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். ஏனென்றால் அவர்கள் அங்கு இருக்கவில்லை. ஐரோப்பாவை ரஷியாவிடம் இருந்து பாதுகாப்பதற்காக நேட்டோவிற்கு நாம் டிரில்லியன் கணக்கான டாலர்களை செலவிடுகிறோம் என்பது உங்களுக்கு தெரியும் - நாம் எப்போதும் அங்கே இருந்திருக்கிறோம். நாம் இல்லாமல் அவர்களால் அதை செய்ய முடியாது," என்று கூறினார்.

இதற்கிடையில், வருடாந்திர வெள்ளை மாளிகை செய்தியாளர் இரவு விருந்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகை செய்தியாளர் சங்கத்தின் தலைவர் வெய்ஜியா ஜியாங் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், பாதுகாப்பு பணியாளர்களின் விரைவான நடவடிக்கையை பாராட்டியதோடு, அதனை ஒரு "மனதை உலுக்கும் தருணம்" என்றும் குறிப்பிட்டார்.

"வாஷிங்டன் ஹில்டனில் நேற்று இரவு நடந்த துப்பாக்கி சூடு, அங்கு கூடியிருந்த அனைவருக்கும் ஒரு மனதை உலுக்கும் தருணமாக இருந்தது. விருந்து மண்டபத்திலும் அதற்கு வெளியேயும் இருந்த அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்த அமெரிக்க இரகசிய சேவை மற்றும் அனைத்து சட்ட அமலாக்க பணியாளர்களுக்கும் எங்களின் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று ஜியாங் X தளத்தில் பதிவிட்டிருந்தார்.

மேலும், அவர்களின் நடவடிக்கைகள் ஆயிரக்கணக்கான விருந்தினர்களை பாதுகாத்ததாகவும், காயமடைந்த அதிகாரி விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் அவர் கூறினார்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் அதிபர் டிரம்ப், முதல் பெண்மணி மெலனியா டிரம்ப், துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மற்றும் பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மீட்பு நடவடிக்கையின் போது ஒரு பாதுகாப்பு அதிகாரி காயமடைந்த போதிலும், முக்கிய பங்கேற்பாளர்கள் அனைவரும் காயமின்றி இருந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

Leave a comment

Comment