நீர்க்கொழும்பு களப்பில் அதிரடிச் சுற்றிவளைப்பு
இலங்கை
வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பாரியளவிலான பீடி இலைத் தொகையொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று (25) அதிகாலை நீர்க்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொதலாவல பாலத்திற்கு அருகிலுள்ள களப்புப் பகுதியில், நீர்க்கொழும்பு கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய இந்தச் சோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, இரண்டு படகுகளைப் பயன்படுத்தி கடத்தி வரப்பட்ட 596 கிலோகிராம் 750 கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த இரண்டு படகுகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு நீர்க்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நீர்க்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






















