ஏஹிபஸ்ஸிகோ” சமாதான நடைபயணத்தின் நான்காம் நாள் இன்று (25), மாவனெல்லை பெலிகம்மன வித்யாவர்தன பொத்குல் விகாரையிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய தினம் இந்த நடைபயணம் தோலங்கமுவ தேசிய பாடசாலை வரை சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வருகை தந்துள்ள வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய பஞ்ஞாக்கர தேரர் தலைமையிலான பிக்குகளின் பங்கேற்புடன், கடந்த 22ஆம் திகதி தம்புள்ளை ரஜமகா விகாரையிலிருந்து இந்த நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


