தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் பரபரப்பாக நடந்து முடிந்து இருக்கிறது. முன் எப்போதும் இல்லாத வகையில் சுமார் 85% வாக்குப்பதிவு நடந்து இருக்கிறது. இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களித்ததே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
சினிமா நட்சத்திரங்களும் வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமையை செய்தனர். ரசிகர்களுக்கும் வேண்டுகோள் வைத்தனர்.
வாக்குப்பதிவு முடிந்தபிறகு பிக் பாஸ் ராஜு ஜெயமோகன் ஒரு அதிர்ச்சி குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.
கையில் வைத்த மை தரம் சரியில்லை என அவர் கூறி இருக்கிறார். இது தான் ink தரமா என கேள்வி கேட்டிருக்கிறார் அவர்.


