வெளிநாட்டிற்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் தொகையானது, வேறு ஒரு தனிநபரின் வங்கி கணக்கிற்கு சென்றுள்ளமை, நாட்டில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அரசாங்கத்தின் நிதி அமைச்சுக்கும், திறைசேரிக்கும், மத்திய வங்கிக்கும், நாட்டின் நிதி முகாமைத்துவச் செயல்முறையை சரியாக கொண்டு நடத்தும் இயலுமை இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
வெளிநாட்டிற்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையானது, வேறு தனிநபரின் வங்கி கணக்கிற்கு சென்றுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார். எனவே தற்போது நாட்டின் நிதிப் பாதுகாப்பு என்பது ஆபத்தில் உள்ளதாக சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டிற்குச் செலுத்தப்பட வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையானது, அங்கீகரிக்கப்பட்ட வணிக நிறுவன கணக்கிற்குப் பதிலாக, ஒரு தனிநபரின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டமையானது, இலங்கையில் கடுமையான நிதி மோசடி மற்றும் சட்டவிரோதப் பணப்பரிமாற்றமாகவே கருதப்படுகிறது.
வெளிநாட்டிற்குச் செலுத்த வேண்டிய பெருந்தொகையான பணத்தை, அதிகாரப்பூர்வ வங்கி வழித்தடங்கள் அல்லாமல், தனிநபர் கணக்குகளுக்கு மாற்றுவது வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தின் கீழ் பாரிய குற்றமாகும்.
இவ்வாறான சம்பவம் ஒன்று நாட்டில் இடம்பெற்றுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.


