TamilsGuide

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது, ​​கொலை மிரட்டல் விடுத்தது மற்றும் தனது துப்பாக்கியைக் காட்டி ஒருவரை அச்சுறுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் பிரேமலால் ஜெயசேகர கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த நேரத்தில், கேள்விக்குட்பட்ட துப்பாக்கிக்கான உரிமம் ஏற்கனவே காலாவதியாகிவிட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment