TamilsGuide

ஈரானின் வான்பரப்பு பகுதியளவில் மீண்டும் திறப்பு

ஈரானின் வான்பரப்பு இன்று (18) காலை முதல் பகுதி அளவில் மீண்டும் திறக்கப்படுவதாக அந்த நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு அறிவித்துள்ளது.

பிராந்தியத்தில் நிலவி வந்த பாதுகாப்பு பதற்றங்களுக்கு மத்தியில் ஈரானின் வான்பரப்பு மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்த விரிவான மதிப்பீடுகளைத் தொடர்ந்து, வான்வழிப் போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மீண்டும் வான்பரப்பு திறக்கப்படுவதாக ஈரானின் தஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்துகள் படிப்படியாக வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

Comment