TamilsGuide

ஹட்டனில் கடும் மழையால் மக்களின் நாளாந்த வாழ்க்கை பாதிப்பு

ஹட்டன் பகுதியில் நேற்று மாலை பெய்த கடும் மழையின் காரணமாக கழிவுநீர் வடிகால் அடைப்பு காரணமாக வீடுகள் நீரில் மூழ்கின.

ஹட்டன் எம்.ஆர். டவுன் பகுதியில் முறையாக பராமரிக்கப்படாத வடிகால் அமைப்பு காரணமாக கழிவுநீரும் மழைநீரும் பெருக்கெடுத்தமையினால் , அப்பகுதியில் உள்ள சில வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அதிகாரிகளின் அலட்சியத்திற்கு மக்கள் எதிர்ப்பினையும் தெரிவித்தனர்.

கடும் மழை பெய்யும் ஒவ்வொரு முறையும் இவ்வாறான அனர்த்த நிலைகள் ஏற்படுகின்றன என்றும், இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்திருந்தபோதிலும் இதுவரை நிலையான தீர்வு வழங்கப்படவில்லை என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
 

Leave a comment

Comment