TamilsGuide

நுவரெலியா வசந்தகால கொண்டாத்திற்கு குவியும் மக்கள்

நுவரெலியா மாநாகரசபையினால் 2026ம் ஆண்டுக்கான நுவரெலியா வசந்தகால கொண்டாத்திற்கு கடந்த மூன்று தினங்களாக பெருந்திரளான மக்கள் வருகை தந்துள்ளனர்.

நாட்டின் பலபாகங்களில் இருந்தும் நுவரெலியா வசந்தகால கொண்டாத்திற்கு மக்கள் வருகை தந்திருப்பதை அவதானிக்க முடிந்தது.

நுவரெலியாவிற்கு வருகை தந்த மக்கள் நுவரெலியா கிரகரி வாவியில் உள்ள படகு சேவைகளின் ஊடாக அவவர்களுடைய சந்தோசத்தை பகிர்ந்து கொண்டதோடு கிரகரி வாவிக்கு அருகாமையில் உள்ள அழாகான மலர் வகைகளையும் கண்டு மகிழ்ந்தோடு ஹேலிக்கப்ட்டர், மற்றும் சீன பிலேன் விமானத்தின் ஊடாக நுவரெலியா பிரதேசத்தை சுற்றிவலம் வந்தனர்.

இதேவேளை உலக நாட்டில் யுத்தம் இடம் பெற்று வந்தாலும் நுவரெலியா வசந்தகால கொண்டாட்டத்திற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களுடைய அரசாங்கமும் நுவரெலியா மாநகர சபையும் சிறந்த ஏற்பாடுகளை முன்னெடுத்தமை தொடர்பாக ஜனாதிபதி அவர்களுக்கு சுற்றுலா மேற்கொள்ள மக்கள் நன்றிகளையும் தெரிவித்தனர்.

இதேவேளை ஏப்ரல் மாதம் 04ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்ந வசந்தகால கொண்டாட்டம் இம் மாதம் 19ம் திகதிவரை இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment