• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லண்டன் வாழ் தமிழரின் நெகிழ்ச்சியான செயல் - தாயின் நினைவாக யாழ்ப்பாணக் கல்லூரிக்கு பேருந்து நன்கொடை

கனடா

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவரும், பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட தொழிலதிபரும், யாழ்ப்பாணக் கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவருமான சீவரத்தினம் முரேஷ், தனது கல்லூரிக்கு சுமார் 30 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள புதிய Mitsubishi Fuso பேருந்து ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வில், இப்பேருந்து கல்லூரியின் அதிபர் ருஷிரா குலசிங்கத்திடம் கையளிக்கப்பட்டது.

தனது அன்புத் தாயார் திருமலரின் முதலாம் ஆண்டு நினைவாக, அவரது நினைவைப் போற்றும் வகையில் சீவரத்தினம் முரேஷ் இந்த உன்னத உதவியைச் செய்துள்ளார்.

Leave a Reply