TamilsGuide

எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது

மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.

30,000 மெட்ரிக் தொன் பேர்னஸ் எண்ணெயுடன் இந்தக் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

நேற்று (12) பிற்பகல் குறித்த கப்பல் நாட்டை வந்தடைந்ததுடன், அதில் உள்ள எரிபொருளை கொலன்னாவ எண்ணெய் களஞ்சிய முனையத்திற்கு விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 

Leave a comment

Comment