TamilsGuide

ஒன்டாரியோ சாலை விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், ஆக்ஸ்போர்டு கவுண்டியில் கடந்த மாதம் இறுதியில் நடந்த கோர விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.

கடந்த மார்ச் 31-ஆம் திகதி மதியம் சுமார் 3 மணி அளவில், நார்விச் டவுன்ஷிப்பில் உள்ள நெடுஞ்சாலை 59 மற்றும் குவேக்கர் தெரு சந்திப்பில் ஒரு எஸ்யூவி (SUV) ரக காரும், டிராக்டர் ட்ரெய்லர் லாரியும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து நடந்த இடத்திலேயே காரை ஓட்டிச் வந்த கேம்பிரிட்ஜைச் சேர்ந்த 39 வயது நபர் மற்றும் டில்சன்பர்க்கைச் சேர்ந்த 13 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் என மூவர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டில்சன்பர்க்கைச் சேர்ந்த 46 மற்றும் 21 வயதுடைய மற்ற இரு பயணிகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தினார்.

இந்த விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், இதில் குற்றவியல் குற்றச்செயல் ஏதும் இல்லாததால் ஓட்டுநர் மீது வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படாது என்று தெரிவித்துள்ளனர்.

இந்தத் துயரமான சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக மேலதிக தகவல்கள் எதையும் வெளியிடப்போவதில்லை என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
 

Leave a comment

Comment