TamilsGuide

தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல் – ஒருவர் உயிரிழப்பு- ஐவர் கைது

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மொரகஹஹேன பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த விடுதியில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்றுக்கு இடையில் நேற்று (09) இரவு இடம்பெற்ற விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட வாய்த் தர்க்கம் மோதலாக மாறிய நிலையில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதுடன் தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் அதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் நிக்கதலுபொத்த, வெல்லவ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment