TamilsGuide

லெபனான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கை பெண் காயம்

லெபனான் மீது நேற்று (08) நடத்தப்பட்ட தாக்குதல்களில் இலங்கை பெண் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த பெண் தற்போது நலமுடன் இருப்பதாக பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளினால் 10 நிமிடங்களுக்குள் லெபனான் மீது நடத்தப்பட்ட பாரிய வான்வழித் தாக்குதல்களில் இதுவரை 254 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,165 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதாரப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.  
 

Leave a comment

Comment