TamilsGuide

பிரித்தானியா செல்ல முயன்ற நால்வர் ஆங்கிலக் கால்வாயில் பலி

பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையேயான ஆங்கிலக் கால்வாயில் சிறிய படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் உயிரிழந்ததாக பிரெஞ்சு உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கலேஸ் நகருக்குத் தெற்கே, எக்விஹென் மற்றும் எகால்ட் கடற்கரைகளுக்கு இடையே உள்ள பூலோன் கடற்கரைக்கு அப்பால் நிகழ்ந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இன்று காலை முதல் மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்தினை அடுத்து சுமார் 30 பேர் அவசர மருத்துவ சேவையினரால் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், ஆங்கிலக் கால்வாயை கடந்து பிரித்தானியாவுக்கு நுழைபவர்களின் எண்ணிக்கை வியத்தகு வகையில் அதிகரித்துள்ளது.

2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில், உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சுமார் 2,200 புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்துள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இடம்பெயர்வு கண்காணிப்பகத்தின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
 

Leave a comment

Comment