TamilsGuide

ஏப்ரல் 13, 14 ஆம் திகதிகளில் மதுபான நிலையங்களுக்கு பூட்டு

தமிழ் – சிங்களப் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் நாடு முழுவதிலுமுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என கலாலல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தக் காலத்தில் மதுபானம் விற்பனை செய்து கலால் சட்டங்களை மீறும் உரிமதாரர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சட்டவிரோத மதுபான விற்பனை குறித்து 1913 என்ற உதவி எண்ணுக்குத் தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்ட்டுள்ளது.

பண்டிகைக் காலங்களில் சட்டவிரோத மதுபான விநியோகத்தில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக, காலி, அனுராதபுரம், கண்டி, குருநாகல் மற்றும் நாடு தழுவிய அளவில் உள்ள சிறப்பு கலால் நடவடிக்கைப் பிரிவுகள் உயர் எச்சரிக்கை நிலையில் இருக்கும் என்றும் திணைக்களம் கூறியுள்ளது.
 

Leave a comment

Comment