TamilsGuide

இலங்கை முதலீட்டுச் சபையின் பதில் தலைவராக கலாநிதி சுலக்ஷண ஜயவர்தன

இலங்கை முதலீட்டுச் சபையின் (BOI) பதில் தலைவராக கலாநிதி சுலக்ஷண ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை நிர்வாகச் சேவையில் 23 ஆண்டுகளுக்கும் மேலான சிறந்த அனுபவத்தைக் கொண்ட விசேட தர அதிகாரியான கலாநிதி ஜயவர்தன, அரச நிர்வாகம், கொள்கை உருவாக்கம் மற்றும் பாரிய அளவிலான திட்ட முகாமைத்துவம் ஆகியவற்றில் பரந்த அனுபவம் கொண்ட சிரேஷ்ட அரச அதிகாரியாவார்.

கலாநிதி சுலக்ஷண ஜயவர்தன, கொழும்பு 01 இல் உள்ள உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள இலங்கை முதலீட்டுச் சபையில் இன்று (08) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார்.

இந்நிகழ்வில் இலங்கை முதலீட்டுச் சபையின் பணிப்பாளர் நாயகம் ரேணுகா எம். வீரகோன் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
 

Leave a comment

Comment