• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நுவரெலியா வசந்தகால கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

இலங்கை

நுவரெலியா மாகாண சபையின் ஏற்பாட்டில் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கான நுவரெலியா வசந்தகால கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வசந்தகால கொண்டாட்டமானது ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.இதேவேளை வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்துள்ளதாக நுவரெலியா மாகாண சபையின் முதல்வர் உப்பாளி வனிகசேகர தெரிவித்தார்.

இந்நிலையில் நுவரெலியா வசந்தகால கொண்டாட்டத்துக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க நுவரெலியா மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை இக்கொண்டாட்ட நாட்களில் ஹெலிக்கொப்டர் சவாரி, படகு சவாரி, மலர் கண்காட்சி போன்ற களியாட்ட நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply