TamilsGuide

பண்டைய தமிழர்களால் கடற்கலங்களுக்கு வழங்கப்பட்டு வந்த தமிழ்ச் சொற்கள்.

கடற்கலங்களுக்கு 200 பெயர்கள் இருப்பதாக தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர்! அவற்றினுள் என்னால் சேகரிக்கப்பட்ட 160+ பெயர்களைக் கீழே கொடுத்துள்ளேன். படித்து மகிழவும்…. ஆனால் அதற்கு முன்னர் உருவோடுபவர்கள் பற்றி இவ்விடத்தில் நீங்கள் வாசிப்பது சிறிது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
→ கப்பல்கள் கட்ட வேண்டிய நேரங்களைப் பற்றி “நீகமசிகாமணி” என்னும் நூல் கப்பற்கலை பற்றி விவரித்துள்ளது.
கடற்றுறை - கடலின் கரையில் மக்கள் புழங்கும் & பொருள் வந்திறங்கும் இடம். - Old word for Harbour. அந்த கடற்றுறையின் முகப்பு. ஆனால் இன்று கடற்றுறை என்னுஞ் சொல் வழக்கிறந்து முகப்பினைக் குறித்த துறைமுகம் வழக்கிலுள்ளது.,
துறைமுகப்பட்டினம் - கப்பல்கள் நிறுத்திவைக்கப்படவும் மக்கள் அல்லது சரக்குகளை துறைமுகத்திலிருந்து நிலத்திற்கு கொண்டுசெல்கின்ற ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துறைமுகங்களைக் கொண்டிருக்கும் கடற்கரை அல்லது கரையில் உள்ள இடவமைப்பாகும்
முன்துறை - கழிமுகத்துக்கு வெளியே அதிக நிறையுள்ள பொருட்களை மட்டும் இறக்கும் இடம்.
பெருந்துறைமுகம் - கழிமுகத்துக்கு உள்ளே பண்டகசாலை போன்ற இடங்கள் உள்ள இடம்.
தங்குதுறை - கப்பல் வந்து தங்கிச் செல்லும் கடற்றுறை-இறங்குதுறை - Jetty-உலர்துறை - dry docks.
பதனம் - கலங்கள் காற்றினாலும் கொள்ளைக்காரராலும் சேதமின்றிப் பாதுகாப்பாய் இருக்குமிடம்.
தோணித்துறை, நாவாய்த்துறை/நாவாந்துறை - தோணிகளை நிறுத்தவும் செலுத்தவும் வாய்ப்பான துறை... தற்காலத்து மீன் பிடித் துறைமுகங்கள் & நாயாற்றில் கடல்வேங்கை தாவளம் (முகாம்=urudu) இருந்த இடமும் இந்த வகையே!
மீனவர் - நீர்நிலை வேடுவர்
கடற்கலனை செலுத்துபவருக்கான பொதுச்சொற்கள் - (helmsman)
மீகாமன்
மீகான்
ஓட்டி
நீகான்
கடற்பாய்ச்சி
படவன் - படகினை ஓட்டுவோன்
மண்டாடி - இவர் தொழில் நுணுக்கங்களை அறிந்தவர். இவரே மேலாப்பாச்சி எனவும் அழைக்கப்படுவார்.
தண்டுக்காரன் - மரக்கலத்தை இயக்கத் தண்டுபிடிப்பவன், கொம்பால் கட்டுமரத்தை செலுத்துபவன்.
சம்மாடி - படகு/வள்ளத்தின் தலைவர்
தண்டையல்/தண்டயல்/தண்டல், மேந்தலை, நீயான் - (captain of the ship) தமிழர் கப்பற்கலை மரபில் கப்பல் தலைவர் ஆவார்.
திண்டேல்‌ - கப்பலைக்‌ கண்காணிப்பவன்‌ - boat swain.
கலவர், கலாள், கம்மகாரர், பரவர், பரதர், பரதவர், நாவிகர், கடலர், திரையர் - (mariners, sailors, seaman, or seafarer) - கடற்கலங்களில் செலவாவோரிற்கான தமிழ்சொற்கள்.
கடலோடி - கடல் பற்றிய அறிவு கொண்ட நீண்ட காலம் கடலில் செலவாகக்கூடிய பரதர்.
ஆழ்கடலோடிகள் - ஆழ்கடல்களில் நீண்ட காலம் செலவாகக்கூடிய பரதர்.
மண்டாடி - கடல் நீர்வாடு பற்றிய அழ்ந்த அறிவு உள்ளவர்; நீர் ஓட்டத்தை வைத்து மீன்பிடிக்கும் உத்தி அறிந்தவர்.
கம்மாறுகாரர் (கம்மா + ஆறு + கடலான் என்பதின் சுருக்கம்) - மீன் பிடித்தலில் கெத்தானவன்.
முத்துக் குளிப்போர் - கடலில் மூழ்கி சங்கு, முத்து போன்ற கடலாழத்தில் உள்ளவற்றை அகழ்ந்தெடுப்போர்
தொள்ளாழியார் - கடல் ஆழி பற்றி நிறைந்த அறிவுடையவர்.
நுளையர் - தென்னை நாரில் இருந்து பாய்க்கயிறு திரிப்பவர்.
கழியர் - உப்பளவர்.
கடல்கோலமிட்டாந்தான் - கடல் சூழ்ந்த நிலையிலும் மூழ்காதவன்.
உச்சாணியார் - பாய்மரத்தின் மேல் இருந்து வேலை செய்யகூடியவர் .
மூப்பர், சேவை- மூத்த அதிகாரி
கம்மியர் - பொறியியல் அதிகாரி.
காப்பு - கப்பலில் உள்ள ஆயுதங்களுக்குப் பொறுப்பதிகாரி.
சுழியோடிகள் - சுழித்துக் கொண்டு ஓடும் வலிமையான சுழல் நீரின் அடியிலும் நீந்திச் செல்லும் திறன் படைத்தவர்கள்.
நீர்முழுகி - நீரில் முழுகுவோன் (diver)
ஓசுநன் - பாய்மரங்களை உயர்த்துபவன்.
ஓடாவியார் - தோணி மற்றும் கப்பல்களை கட்டியவர்கள்.
துறைவன், கொண்கன்- என்றால் துறைமுக பரதவ தலைவன்.
சேர்ப்பன் - நெய்தனிலத் தலைவன்
புலம்பன் - கடற்கரைத் தலைவன்

அழிசி - காயல்(back water) அல்லது கழிமுகப்(delta) பகுதியின் தலைவன். இப்பெயர்கள் கூடுதலாக சேரர்களால் சூட்டப் பெற்றுள்ளன.
கலப்பத்துக்காரன்,கலப்பத்துஆள் - கலத்தின் நீக்கலடைப்பவன்.
சாலர் - போக்கூழாக என்னவென்றே தெரியவில்லை!
பண்டாரி - தோணியில் உள்ள சமையல்காரன்
பண்டாரிப் பெடியன்/ சுடுவான் பெடியன் - சிறுவயது பெடியள், பண்டாரிக்கும் வேலை செய்வொருக்கும் இடையிலான தொடர்பாள்.
கால் பங்காள் அ கால் பங்குவாங்கி - தோணியினுள் வேலை செய்வோரில் சுடுவான் பெடியளின் பதவி.
அரைப் பங்காள் அ அரைப் பங்குவாங்கி - தோணியினுள் வேலை செய்வோரில் பாய்மரமேறி பாய்மரம் அவிழ்த்து விடுவோரின் பதவி.
முக்கால் பங்காள் அ முக்கால் பங்குவாங்கி - தோணியினுள் வேலை செய்வோரில் 12–12 மணிநேர வேலையினை சரியாகச் செய்யும் பருவம் வந்தோர்.
முழுப் பங்காள் அ முழுப் பங்குவாங்கி - தண்டலிடம் இன்னார் நிறைவாக வேலை செய்வார் என்ற மனநிறைவை பெற்றவர்.
திடுல், பொறி , கைப்பந்தல், தண்டாரம், சிமிலி, பத்தாசு, மாயிலி, ஏதல், பாரம், பாரகம், மதலை, நவாடா, இகுரி, சோங்கு, பாரதி, வள்ளியம், அம்பணம், ஆலாத்து, நாவம்‌, ஐவி, போழ்‌, கரைவலம், சதா, தொள்ளம் / தொள்ளை, கடவுமரம்- என்னவென்றே தெரியவில்லை!

 

Sulochana Ram
 

Leave a comment

Comment