டொராண்டோ நகரில் உணவுப் பொருட்களின் அதிகரித்து வரும் விலையை கட்டுப்படுத்த புதிய முயற்சியாக, நகர சபை ‘லாப நோக்கமற்ற’ (not-for-profit) மளிகைக் கடைகள் அமைக்கும் திட்டத்தை முன்னெடுக்க வாக்களித்துள்ளது.
கனடாவில் அரிதாக காணப்படும் இந்த முயற்சி, குறைந்த வருமான மக்களுக்கு மலிவான உணவு கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், டவுன்டவுன் டொராண்டோ, நார்த் யார்க், ஸ்கார்பரோ மற்றும் எட்டோபிகோ ஆகிய பகுதிகளில் நான்கு மளிகைக் கடைகள் தொடங்கப்பட உள்ளன.
இவை “food deserts” எனப்படும், மளிகைக் கடைகள் குறைவாக உள்ள பகுதிகளில் செயல்படும். ஆனால், இந்த முயற்சி குறித்து பலரும் சந்தேகத்தையும் கவலையையும் வெளியிட்டுள்ளனர்.
மளிகை வணிகத்தில் லாபம் மிகவும் குறைவு – ஒவ்வொரு டாலருக்கும் சுமார் 4 சென்ட் மட்டுமே லாபம் கிடைக்கும்.
இந்த துறையில் பெரிய அளவில் செயல்பட வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


