• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நெடுஞ்சாலையில் கொழுந்துவிட்டு எரிந்த சொகுசு பேருந்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

இலங்கை

கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பயணிகள் போக்குவரத்து சொகுசு பேருந்து ஒன்று, தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன இடைமாறல் பகுதிக்கு அருகில் இன்று (27) தீப்பற்றியுள்ளது.

பிற்பகல் 01.55 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், இதில் பேருந்து முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.

இந்த தீ விபத்தினால் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 

Leave a Reply