TamilsGuide

ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை இடைநிறுத்தம்

தனது ஒரு நாள் சேவை உட்பட அனைத்து சேவைகளையும் இன்று (27) முதல் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தி வைப்பதற்கு ஆட்பதிவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நேற்று (26) பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கணினி அமைப்பு மீண்டும் இயல்பு நிலைக்கு வரும் வரை அனைத்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.
 

Leave a comment

Comment