TamilsGuide

களுபோவில பகுதியில் சீனப் பெண் சடலமாக மீட்பு

கொஹுவல, களுபோவில பகுதியில் திங்கட்கிழமை (23) இளம் சீனப் பெண்ணொருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

26 வயதான அந்தப் பெண், அவர் வசித்து வந்த வீட்டின் ஒரு அறைக்குள் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்து கிடந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.

விசாரணையில், இந்தக் கொலை அவரது முன்னாள் சீனக் காதலரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சந்தேக நபரைக் கைது செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
 

Leave a comment

Comment