உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அராம்கோ நிறுவனம் அடுத்த ஏப்ரல் மாதத்தில் இரண்டாவது தடவையாக ஆசியாவுக்கான மசகு எண்ணெய் விநியோகத்தைக் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணையில் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகள் உலகளாவிய எரிசக்தி ஓட்டத்தில் தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நம்பகத் தகுந்த வட்டாரங்களை மேற்கொள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை வெளியிட்ட தகவலின்படி, உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சீனா, தனது முதன்மை ரகமான அரப் லைட் மசகு எண்ணெயை மட்டுமே நீண்டகால வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
இந்த சரக்குகள் வளைகுடா துறைமுகத்திற்குப் பதிலாக, செங்கடல் துறைமுகமான யான்பு வழியாக அனுப்பப்படுகின்றன.
இந்த நடவடிக்கை, ஹார்முஸ் பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், ஆசிய சுத்திகரிப்பு ஆலைகளுக்கான விநியோகத்தைக் கடுமையாகக் குறைத்து, சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களை உற்பத்தி செய்யும் அவற்றின் திறனைக் கட்டுப்படுத்தியுள்ளது.
ஈரானுடனான அமெரிக்க – இஸ்ரேல் மோதலைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்த விநியோகக் குறைப்புகள் வந்துள்ளன.
இந்த மோதல், உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் கணிசமான பங்கைக் கையாளும் முக்கிய நீர்வழிப்பாதை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது.
சவுதி அரேபியாவின் மசகு எண்ணெய் ஏற்றுமதி ஏற்கனவே கடுமையாகக் குறைந்துள்ளது.
கேப்லர் (Kpler) என்ற பகுப்பாய்வு நிறுவனத்தின் தரவுகளின்படி, மார்ச் மாதத்தில் இதுவரை ஏற்றுமதி சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 4.35 மில்லியன் பீப்பாய்களாக உள்ளது.
இது பெப்ரவரியில் ஒரு நாளைக்கு 7.1 மில்லியன் பீப்பாய்களாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


