TamilsGuide

கியூபாவை நினைத்து கூட பார்க்க வேண்டாம் - டிரம்பை எச்சரித்த புதின்

ஒரு நாட்டை மிரட்டுவது சட்டவிரோதம் கியூபாவுடன் அசைக்க முடியாத ஒற்றுமையுன் இருக்கிறோம் கியூபாவுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயார் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளமை, கியூபாவை சொந்தமாக நினைக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு கடுப்பை வரவழைத்துள்ளது.

அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய நாடு கியூபா . பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு பின் தற்போது அந்நாட்டை மிகேல் டையஸ் கெனல் கியூபா ஆண்டு வருகிறார். இந்நிலையில்தான் கியூபாவை கைப்பற்றும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியிருக்கிறது.

கியூபாவை கைப்பற்றும் முயற்சி

கரீபியன் தீவு நாடான கியூபா வெனிசுலா நாட்டிடமிருந்து எரிபொருளை வாங்கி வந்தது. ஆனால், வெனிசுலா அதிபரை சமீபத்தில் அமெரிக்கா கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும், கியூபா தங்களிடம் மட்டுமே வர்த்தகம் செய்ய வேண்டும் என அமெரிக்கா கூறியது.

ஆனால், கியூபா அதை கேட்கவில்லை. எனவே, கியூபாவுக்கு எரிபொருள் சப்ளை பண்ணும் நாடுகளுக்கு அதிக அளவு வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்ததால் கியூபாவிற்கு எரிபொருள் செல்வது தடுக்கப்பட்டது.

கியூபாவின் மின் உற்பத்தியில் 70 தவீதம் எரிபொருள் சார்ந்தது என்பதால் மின் உற்பத்தி தடைபட்டது. இதையடுத்து, கடந்த 8 நாட்களுக்கும் மேல் அங்கு அந்நாடு இருளில் மூழ்கி இருக்கிறது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய டொனால்ட் டிரம்ப் ‘கியூபாவை விடுவித்தாலும் சரி அல்லது கைப்பற்றினாலும் சரி.. என்னால அந்த தீவை எதுவும் செய்ய முடியும்.. கியூபாவை கைப்பற்றும் கௌரவம் எனக்கு வேண்டும்’ என கூறியிருந்தார்.

ஏற்கனவே கிரீன்லாந்தை நாங்கள் கைப்பற்றுவோம் என கூறியிருந்த அமெரிக்காவின் அடுத்த டார்கெட் கியூபா என்பது தெரிய வந்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ‘ஒரு நாட்டை மிரட்டுவது சட்டவிரோதம்

கியூபாவுடன் அசைக்க முடியாத ஒற்றுமையுன் இருக்கிறோம்.. கியூபாவுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயார்’ என அவர் தெரிவித்திருக்கிறார்.

Leave a comment

Comment