TamilsGuide

604 லீட்டர் பெற்றோலுடன் வர்த்தகர் க‍ைது

பொலன்னறுவை, மீகஸ்வேவ பகுதியில் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் 604 லீட்டர் பெற்றோலை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 70 வயதான சில்லறைக் கடையொன்றின் உரிமையாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கையானது நேற்று (18) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மீகஸ்வேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து பெற்றோல் இருப்புகளை சேகரித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவற்றை எரிபொருள் பற்றாக்குறை காலங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேக நபர் இன்று (19) ஹிங்குரகொட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
 

Leave a comment

Comment