TamilsGuide

இலங்கை வந்துள்ள அமெரிக்க சிறப்புத் தூதுவருடன் ஜனாதிபதி சந்திப்பு

நாட்டிற்கு வருகை தந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க விசேட பிரதிநிதியும், இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதுவருமான செர்ஜியோ கோர் (Sergio Gor) ஜனாதிபதி  அநுரகுமார திஸாநாயக்கவுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்த சந்தப்பு இன்று முற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

மேலும், மத்திய கிழக்கின் போர்ச் சூழல் குறித்த இலங்கையின் நிலைப்பாடு மற்றும் போர்ச் சூழல் காரணமாக இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் இதன்போது ஜனாதிபதி தூதுக்குழுவினருக்கு விளக்கமளித்தார்.
 

Leave a comment

Comment