TamilsGuide

லண்டன் வாழ் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சித்தகவல் - நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்

வரவிருக்கும் குளிர்காலத்தை முன்னிட்டு பிரிட்டிஷ் ஏர்வேஸ் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி, 2026 ஒக்டோபர் 23 ஆம் திகதி முதல் லண்டன் கெட்விக் விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு வாரத்திற்கு மூன்று முறை நேரடி விமான சேவைகள் முன்னெடுக்கப்படும்.

இந்த விமான சேவைகளுக்கான பயணச்சீட்டு விற்பனை நேற்று (17) ஆரம்பமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து லண்டனுக்கு நேரடி விமான சேவைகளை முன்னெடுக்கும் ஒரே விமான சேவையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மாத்திரமே தற்போது காணப்படுகின்றது.
 

Leave a comment

Comment