TamilsGuide

அனுமதியின்றி ட்ரோன்களை இயக்குபவர்களுக்கு எச்சரிக்கை

முறையான அனுமதி இல்லாமல் நாட்டில் ட்ரோன்களைப் பறக்கவிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது என உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நபர்களுக்கு நினைவூட்டும் பொது அறிவிப்பை இலங்கை விமானப்படை (SLAF) வெளியிட்டுள்ளது.

உயர் பாதுகாப்பு பகுதிகளில் அனுமதியின்றி ட்ரோன்களை இயக்கிய நபர்கள் மீது இதற்கு முன்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ட்ரோன்களை இயக்க விரும்பும் எவரும், தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க தேவையான அனுமதிகளைப் பெற வேண்டும்.

இந்த அறிவிப்பின் நோக்கம், ட்ரோன் இயக்குபவர்களுக்கு ஏற்படும் சட்டச் சிக்கல்களையும் சிரமங்களையும் தடுப்பதோடு, தேசியப் பாதுகாப்பையும் உறுதி செய்வதாகும் என்று இலங்கை விமானப்படை அந்த அறிவிப்பில் மேலும் கூறியுள்ளது.
 

Leave a comment

Comment