இந்திய சினிமாவின் முன்னணி நடிகையான தமன்னா. தற்போது சுந்தர் சி இயக்கத்தில் விஷால் ஜோடியாக 'புருஷன்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்புக்கிடையே சென்னையில் நடந்த ஒரு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் தமன்னா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவில் அவர் மாணவ மாணவிகள் மத்தியில் பேசும்போது, "மாணவர்கள் ஒவ்வொரு நிமிடங்களையும் சந்தோஷமாக எதிர்கொள்ளுங்கள். அதற்கு ஒவ்வொருவரும் காதலியுங்கள். மறுபடியும், மறுபடியும் காதலை தொடங்குங்கள்". என்றார்.
இதற்கு மாணவர்கள் உற்சாகமாக கரகோஷம் எழுப்பிய நிலையில், "காதல் என்றதும், தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். உங்கள் படிப்பை, வேலையை, உங்களுடன் இருக்கும் உறவுகளை காதலியுங்கள். படிக்கும் காலத்தில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள்", என்று சிரித்தபடி விளக்கம் அளித்தார்.
மேலும், "எனக்கும் படிக்க ஆசை இருக்கிறது. வாய்ப்பு இருந்தால் உங் களில் ஒருவராக நானும் படிக்க ஆசைப்படுகிறேன். எனக்கு வாய்ப்பு கொடுத்தால் ஏரோநாட்டிக்கல் படிக்க சீட் தாருங்களேன்", என பல்கலைக்க ழக நிர்வாகத்திடம் கேட்க, அவர்களும், 'நிச்சயமாக' என்று பதிலளித்தனர்.


