TamilsGuide

குவைத் விமான நிலையம் மீது தாக்குதல் - அழிக்கப்பட்ட ட்ரோன்கள்

குவைத் விமான நிலையம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக குவைத் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் மூன்று ட்ரோன்கள் விமான நிலையத்தை குறிவைத்து ஏவப்பட்டதாகவும், அதனால் அங்குள்ள ரேடார் அமைப்பு சேதமடைந்ததாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மேலும் ஏவப்பட்ட ஐந்து ட்ரோன்களை குவைத் பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாக அழித்துள்ளதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
 

Leave a comment

Comment