ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது.
இதற்கிடையே, ஈரானின் தாக்குதலில் பெஞ்சமின் நேதன்யாகு கொல்லப்பட்டு விட்டார். தற்போது வெளியாகும் வீடியோக்கள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் என்றும் கூறி வந்தனர். இது சர்வதேச அளவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நேதன்யாகு ஒரு உணவகத்தில் நின்று காபி அருந்தியபடி நகைச்சுவையாக பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புதிய வீடியோவில் தனது இரு கைகளையும் கேமராவுக்கு மிக அருகில் உயர்த்தி விரல்களைக் காட்டிய நேதன்யாகு, எனது விரல்களை எண்ண விரும்புகிறீர்களா? இதோ பாருங்கள், அனைத்தும் சரியாக உள்ளன. மக்கள் வெளியே சென்று தூய காற்றைச் சுவாசியுங்கள்; ஆனால், பாதுகாப்பான இடத்திற்கு அருகிலேயே இருங்கள்.
உங்கள் மன உறுதி வியக்கத்தக்கது; அது எனக்கும், அரசாங்கத்துக்கும் அளிக்கிறது. ஈரானை நாங்கள் மிகக் கடுமையாகத் தாக்கி வருகிறோம். இன்றும் கூட. உங்கள் அனைவருக்கும் ஒன்று சொல்கிறேன், நீங்களும் தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள் என பேசியுள்ளார்.


