TamilsGuide

எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவை கைது செய்யுமாறு மஹர நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பான வழக்கு இன்று மஹர நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவர் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.

இதனைக் கருத்திற் கொண்ட மஹர மேலதிக நீதவான் பண்டார இலங்கசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவுக்கு இவ்வாறு பிடியாணை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
 

Leave a comment

Comment