மட்டக்களப்பு - காத்தான்குடி கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் மர்ம பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ. பி அழக கோன் தெரிவித்தார்.
குறித்த மர்மப் பொருள் நேற்று மாலை கரையொதுங்கியுள்ளது. சுமார் 25 அடி நீளமும், 4 ஆடி உயரமும் கொண்ட இந்த மர்மப்பொருள் ரெஜிபோர்மினால் காணப்படுகிறது.
இந்நிலையில் கப்பல் தரைதட்டும்போது அதன் பாதுகாப்பிற்கு பயன்படும் தடுப்பு ஆணையாக இது இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த மர்ம பொருளை மக்கள் சென்று பார்வையிட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த மர்மப்பொருள் தொடர்பான விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.


