TamilsGuide

உலகின் முதல் ட்ரில்லினியர் ஆகிறாரா எலோன் மஸ்க்

உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் எலோன் மஸ்க், மனித வரலாற்றிலேயே இதுவரை எவரும் எட்டாத உச்சத்தை எட்டியுள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் தெரிவித்துள்ளது.

அவர் விரைவில் உலகின் முதல் 'ட்ரில்லினியர்' (ஒரு லட்சம் கோடி டாலர் அதிபதி) ஆவதற்கு வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள 2026-ஆம் ஆண்டிற்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலில், எலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பு 839 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 12 மாதங்களில் மட்டும் இவரது சொத்து மதிப்பு சுமார் 500 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. டெஸ்லா (Tesla) மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனங்களின் பங்குகள் அசுர வளர்ச்சி கண்டதே இதற்கு முக்கிய காரணமாகும்.

800 பில்லியன் டாலர் எல்லையைக் கடந்த முதல் நபர் என்ற பெருமையையும் மஸ்க் பெற்றுள்ளார்.

2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் டொனால்ட் ட்ரம்பிற்கு மஸ்க் ஆதரவு தெரிவித்ததால், டெஸ்லா பங்குகள் சரிவைச் சந்தித்தன.

எனினும், ஆண்டின் பிற்பகுதியில் மஸ்க் தனது அரசியல் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு பங்குகள் மீண்டும் உயர்ந்தன. மஸ்க் இலக்குகளை எட்டும் பட்சத்தில், அவருக்கு 1 டிரில்லியன் டாலர் வரையிலான ஊதியத் தொகுப்பை வழங்க டெஸ்லா பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

ஃபோர்ப்ஸ் பட்டியலில் மஸ்க் முதலிடத்தில் இருக்க, அவருக்கு அடுத்தபடியாக தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த மற்ற பிரபலங்கள் உள்ளனர்:

1. எலோன் மஸ்க்: 839 பில்லியன் டொலர்

2. லேரி பேஜ் (கூகுள்): 257 பில்லியன் டொலர்

3. செர்ஜி பிரின் (கூகுள்): 237 பில்லியன் டொலர்

4. ஜெஃப் பெசோஸ் (அமேசான்): 224 பில்லியன் டொலர்

5. மார்க் ஜுக்கர்பெர்க் (மெட்டா): 222 பில்லியன் டொலர்

Leave a comment

Comment