எண்ணெய் கப்பல்களை தடுத்தால் ஈரான் மீது 20 மடங்கு கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.
அதற்கு ஈரான் பதில் அளித்துள்ளது. அந்நாட்டின் மூத்த பாதுகாப்பு அதிகாரி அலி லரிஜானி தனது 'எக்ஸ்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தியாக தேசமான ஈரான் உங்களது (டிரம்ப்) வெற்று மிரட்டல்களுக்கு அஞ்சாது. உங்களை விட பெரியவர்களால் கூட ஈரானை அழிக்க முடியவில்லை. நீங்களே அழிந்து போகாத அளவுக்கு உஷாராக இருங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
டிரம்பை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக கடந்த காலங்களில் ஈரான் மீது குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.


