TamilsGuide

போதைப்பொருள், ஆயுதங்களுடன் கைப்பற்றப்பட்ட இழுவைப் படகு

இலங்கையின் தெற்கு கடற்கரைக்கு அப்பால் உள்ள ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது, ​​போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் சாக்கு மூட்டைகளை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடி இழுவைப் படகு ஒன்று கைப்பற்றப்பட்டது.

குறித்த படகு மேலதிக விசாரணைக்காக கரைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் கடற்படை தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் இந்த பறிமுதல் தொடர்பான மேலதிக தகவல்கள் உரிய நேரத்தில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment