TamilsGuide

வவுனியாவில் போதை மாத்திரைகளுடன் நான்கு இளைஞர்கள் கைது

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் இன்று தெரிவித்தனர்.

வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 4இளைஞர்கள் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 500போதை மாத்திரைகள் பொலிசாரால் மீட்கப்பட்டது.

குறித்த கைது நடவடிக்கை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ச தலைமையில் பொலிஸ் குழுவால் விசேட சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள் நாளையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 

Leave a comment

Comment