TamilsGuide

வட்டுவாகல் கோட்டாபய கடற்படை தளத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று முல்லைதீவு வட்டுவாகல் பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னேடுத்தனர்.

வட்டுவாகல் கோட்டாபய கடற்படை தளத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணியானது வட்டுவாகல் பாலம் ஊடாக வட்டுவாகல் சந்திக்கு அருகில் உள்ள பகுதியை வரை சென்று நிறைவுற்றது.

இந்தப் பகுதியானது இறுதி யுத்த காலப்பகுதியில் தமது உறவுகளை ராணுவத்திடம் கையளித்த இடம் என தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தை ஆரம்பித்து ஒன்பது வருடங்கள் நிறைவுற்றதையும் மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது பல்வேறுபட்ட கோச அட்டைகளை தாங்கியவாறும் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்த போராட்டத்தில் 250க்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராஜா ரவிகரன் மற்றும் மணிவண்ணன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்..
 

Leave a comment

Comment