TamilsGuide

விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-விசேட அறிவிப்பு

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸ்ஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவல்களின்படி, கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மார்ச் மாதம் 2 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மட்டும் நாடு முழுவதும் மொத்தம் 3,642 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

இவ்வாறு இடம்பெற்ற விபத்துக்களில் 405 விபத்துக்கள் பாரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இவற்றில் மொத்தம் 422 பேர் உயிரிழந்துள்ளதுடன் இவற்றில் படுகாயங்களை ஏற்படுத்திய 866 விபத்துக்கள் பாரதூரமானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் 641 விபத்துக்களில் வாகனங்கள் மற்றும் ஏனைய சொத்துக்களுக்குச் சேதங்களை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது
 

Leave a comment

Comment