TamilsGuide

அமெரிக்க ரேடார் அமைப்பை தாக்கி அழித்த ஈரான் ராணுவம்

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு தாக்குதல் 8-வது நாளாக நீடிக்கிறது. இதற்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சவுதி அரேபியா, கத்தார் போன்ற வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் வளங்கள், ஹோட்டல்கள், விமான நிலையங்கள் போன்றவற்றை ஈரான் கடுமையாக தாக்கி வருகிறது. ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போர் எட்டாவது நாளாக தொடர்கிறது.

இந்நிலையில், ஜோர்டானின் விமானப் படைத்தளத்தில் உள்ள அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை இயக்குவதற்காக 2700 கோடி ரூபாய் மதிப்பிலான ரேடார் அமைப்புகளை ஈரான் தாக்கி அழித்தது.

தென் கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் 8 தாட் அமைப்புகளைக் அமெரிக்கா கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment