TamilsGuide

Oscar விருது விழாவை தொகுத்து வழங்கும் பிரியங்கா சோப்ரா

திரையுலகின் மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக ஆஸ்கார் அகாடமி விருதுகள் இருக்கின்றன.

98 வது ஆஸ்கார் விருதுகள் விழா 16 ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு ஆஸ்கார் போட்டியில் 'சின்னர்ஸ்' திரைப்படம் 16 பரிந்துரைகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக இந்தியாவை சேர்ந்த பான் உலக நட்சத்திர நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் பிரபலங்களான ராபர்ட் டவுனி ஜூனியர், வில் ஆர்னெட் ஆகியோருடன் இணைந்து பிரியங்கா மேடையைப் பகிர்ந்து கொள்ளவுள்ளார்.

ஆஸ்கார் விருதை வழங்குபவராக பிரியங்கா தேர்வு செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 2016-ம் ஆண்டும் அவர் இந்த கௌரவத்தைப் பெற்றிருந்தார்.

பிரியங்கா சோப்ரா நடித்த The Bluff என்ற ஹாலிவுட் திரைப்படம் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதற்கிடையே ராஜமௌலி மற்றும் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் 'வாரணாசி' திரைப்படத்தில் பிரியங்கா நடித்து வருகிறார். 
 

Leave a comment

Comment