TamilsGuide

சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் தடம் புரண்டது

சுண்ணாகத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் தடம் புரண்டது!

இன்று காலை மணல் ஏற்றி வந்த டிப்பர் ஒன்று சுண்ணாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சபாபதிப்பிள்ளை வீதியில் தடம்புரண்டுள்ளது.

சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த குறித்த டிப்பரே இவ்வாறு தடம்புரண்டது. இந்நிலையில் டிப்பர் சாரதி சுண்ணாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment