புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையப் புதுப்பித்தல் பணிகள் ஏப்ரலில் நிறைவு
இலங்கை
புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் புதுப்பித்தல் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், அவை ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் நிறைவடையும் என்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
“க்ளின் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் ஒரு முக்கிய முயற்சியாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
புதுப்பித்தலுக்கான தொழிலாளர் ஆதரவை இலங்கை விமானப்படை வழங்குகிறது.
இரண்டு முனையங்களைக் கொண்ட பேருந்து நிலையம் ரூ.424 மில்லியன் செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், தரைத் தளம் பிரதான பேருந்து முனையப் பகுதியாகச் செயல்படும், இரண்டாவது தளத்தில் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான ஓய்வு வசதிகள் இருக்கும்.
மூன்றாவது தளம் நிர்வாக மற்றும் செயல்பாட்டு சேவைகளுக்குப் பயன்படுத்தப்படும்.
பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து முறைகள் குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வளாகத்திற்குள் ஒரு புதிய தகவல் மையமும் நிறுவப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.























